Tuesday 7th of May 2024 12:27:29 AM GMT

LANGUAGE - TAMIL
.
இலங்கையில் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 3321 ஆக அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 3321 ஆக அதிகரிப்பு!


சற்றுமுன்னதாக மேலும் சிலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து இலங்கையில் கொரோனா தொற்றாளர்களது எண்ணிக்கை 3321 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்று ஏற்கனவே இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னதாக மேலும் ஆறு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வருகை தந்த 5 பேருக்கும், ஐக்கிய அமெரிக்காவில் இருந்து வந்த இருவருக்கும் மற்றும் எத்தியோப்பியாவில் இருந்து வந்த ஒருவருக்குமே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இலங்கையில் கொரோனா தொற்று உறுதியானவர்களது எண்ணிக்கை 3 ஆயிரத்து 321 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்று உறுதியான நிலையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று மேலும் 11 பேர் குணமடைந்து வெளியேறியுள்ளனர்.

இதையடுத்து இதுவரை கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களது மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 129 அக உயர்வடைந்துள்ளது.

இந்நிலையில் இலங்கையில் உள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை நிலையங்களில் 179 பேர் சிகிச்சை பெற்றுவருகையில் சிகிச்சை பலனின்றி இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE